Thursday, February 10, 2011

ராதாமோகனின் பயணம - இதுவரை


கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுக்கும் தமிழ் இயக்குனர்களில் முதன்மையானவர்களுள் ஒருவர் ராதாமோகன். ஆனால் அதிக ஆர்பாட்டம் இல்லாதது இவரது பலவீனம். என்னை பொருத்தவரையில் அதுவே அவர் பலமும் கூட.

அழகிய தீயே படம் இவரது முதல் படம் இன்னொரு மெளனராகம். இதன் கதைசொல்லும் திரைக்கதை பாணி அலாதியானது. ஒரு ஹோட்டலில் இருவரின் உரையாலில் ஆரம்பிக்கும் கதை, பிறகு நண்பர்கள் ஒவ்வொருவராக வந்துசேர, புதிதாக வரும் ஒவ்வொரு நபரும, கதையை அதுவரை நடந்த உரையாடலில் இருந்து தொடர்வார். இதை ஒரு சர்வர் ஒட்டுக்கேட்டுக் கொண்டிருப்பார். அந்த சர்வர் உடன் பார்வையாளரும் ஒன்றி கதை வளர்வதை கவனிப்பது போன்று அமைந்திருக்கும் திரைக்கதை. அழகிய தீயே படத்தில் விழிகளின் அருகினில் வானம் ஒரு மிகப்பெரிய ஹிட் பாடல்.
அழகிய தீயே - ராதாமோகனுக்கு ஒரு அழகிய ஆரம்பம் ஆனது.

மொழி ஒலியோடு வாழ்க்கை நடத்தும் இசைக்கலைஞன் ஹீரோ. ஒலியே அறியாத மாற்றுத்திறனாளி ஹீரோயின். இலக்கணம் பிரலாத காதல் கதை. நான் அறிந்த பல தமிழ் குடும்பங்கள் குழந்தைகளோடு இரண்டு-மூன்று முறை தியேட்டருக்கு சென்று பார்த்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில், இந்த சிறப்பு எத்தனை பெரிய சாதனை என்பதை தமிழ்கூறும் நல்லுலகம் அறியும். மொழியின் பலம் அதன் பாடல்கள்.

ராதாமோகனின் சாதனை படம் என்பது என்னை பொருத்தவரை அபியும் நானும். கதைக்கு முக்கியத்துவம் இல்லாத மசாலா தமிழ் படங்கள் எண்ணிக்கையில் அடங்காத அளவு இருக்கின்றன. ஆனால் கதையோ பிளாட்டோ (Plot) இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் தரும் படவரிசையில் அபியும் நானும் தான் முதல்.அபியும் நானும்ஒரு தகப்பனின் கேரக்டர் ஸ்டடி (Character Study) மட்டுமே. திரைக்கதை முதலில் “Meet the Parents” (மாமனாருக்கும் வருங்கால மருமகனுக்கும் நடக்கும் மோதல்) கொஞ்ச நேரம், அறியாத வயதில் செய்த தவறை உணர்ந்து வருந்தும் கேரக்டர் (கேளடி கண்மணி ஹீரோயின் போல்) கதை கொஞ்ச நேரம், (Father of the Bridge) மகளின் கல்யாணம் நடக்கையில் அப்பாவிற்கு நிகழும் நெருக்கடி (Coming of Old-Age Crisis) கொஞ்ச நேரம் என்று அங்கும்-இங்கும் அலைகிறது (திரைக்கதை). நேர்த்தியில்லாத ஒரு இயக்குனரிடம் மாட்டியிருந்தால கதை கிச்சடி அகியிருக்கும். ஆனால் ராதாமோகனின் கையில் இது ஆன்டன் செக்காவ் (Anton Chekov) ஸ்டைல் கேரக்டர் ஸ்டடி நாடகமாக மலர்ந்திருக்கிறது.

செக்காவ் புரட்சி செய்வதாக நினைத்து பிளாட்டே (Plot) இல்லாமல் நாடகம் போட்டப்போது தேர்ந்த ரசிகர்கள் நிறைந்த ரஷ்யாவிலேயே நாடகம் புரியாததால் அரங்கத்தில் கலாட்டா நடந்ததாக கேள்வி. அத்தகைய ஒரு கதைஅமைப்பை தமிழில் செய்ய இமாலய ரிஸ்க் எடுத்த ராதாமோகனின் தைரியத்திற்கு கண்டிப்பாக ஒரு சபாஷ் வைக்க வேண்டும்.

அபியும் நானும் படத்திலும் பாடல்கள் ஒரளவு ஹிட்டே. இதுவரை இசையை ஒரு மிகப் முக்கியமான அங்கமாக கொண்டு படம் எடுத்த ராதாமோகனின் அடுத்த படத்தில் பாடல்களே இல்லை. ராதாமோகனுக்கு உண்மையிலேயே ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போலும்!! அரைத்த மாவையே அரைத்துவிட்டு, சொல்லிய கதையையே திரும்ப்-திரும்ப சொலுவதோடு நில்லாமல், “அவனை நிறுத்தச்சொல். நான் நிறுத்தறேன்என்று நாயகன் கணக்கில் டைலாக் அடிக்கும் அதி-ஹீரோயிஸம் துதிக்கும் பெரும்பான்மை டைரக்டர்களிடமிருந்து விலகி தனித்து தெரிகிறார் ராதாமோகன்.

-         இங்ஙனம்,
   ராதாமோகனின் “பயணம்வெற்றிபெற வாழ்த்தும்,
   கொள்கை பரப்பு செயலாளர் , கதை முன்னேற்ற கழகம்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...