Monday, February 7, 2011

ஆடுகளம் : குருவே சனியானால்?



அழகான இலக்கியத்தமிழில் சேவல்சண்டையின் பாரம்பரியத்தின் அறிமுகத்துடன் கொண்ட்டாடமாக ஆரம்பிக்கிறது. படத்தின் கடைசிகாட்சி வரை அந்த நேர்த்தியை தக்கவைத்துகொள்வதே ஆடுகளத்தின் சிறப்பு.

சோதிடத்தில் ஒருவர் வளர்ச்சிக்கான அதிபதி குரு. அதேபோல் ஒருவரின் எல்லைகளின் அதிபதி சனி. காற்று ஊத ஊத பெரிதாகும் பலூன், தனது எல்லையை மீறும்பொழுது வெடித்துவிடுகிறது. இதுவே குருவிற்கும் சனிக்கும் உள்ள பந்தம். நமது வளர்ச்சியின் அங்கமாக, நமக்கு குருவாக இருப்பவர்கள் பெரும்பாலும் நமது எல்லைகளை வரைய்ருக்கும் சனியாகவும் இருப்பதே யதார்த்த வாழ்வின் “Irony” களுள் ஒன்று. இதை மையக்கருவாக கொண்டதுதான் ஆடுகளம்.

சிபி ம்லயில் இயக்கத்தில், நெடுமுடி வேணுவும் மோகன்லாலும் நடித்த பரதம் படத்தின் கருவும் இதே கருவையே கொண்டுள்ளது. அதில் போட்டிக்கான களம் ச்ங்கீதம். இதில் குரு நெடுமுடி வேணு சிஷ்யன் மோகன்லாலுக்கு அண்ணனாகவும் இருக்கிறார். குடித்துவிட்டு கச்சேரிக்கு பாடவரும் வேணு ஒரு முறை பாடமுடியாமல் போக அவருக்கு பதிலாக பாடுகிறார் மோகன்லால். அதன் பிறகு மோகன்லாலின் புகழ் ஓங்க, வேணுவிற்கு வாய்ப்புகள் குறைய துவங்குகிறது. வேணு மோகன்லால் மீது கோபம் கொள்கிறார். இதன் இருவருக்கும் இடையில் மோதல் வெடிக்கிறது.

பரதம்தமிழில் சீனுவாக பி.வாசுவும் கார்த்திக்கும் நடித்தார்கள்.
அமரஸ் பெரோஸின் நாய்ச்சண்டையை சேவல் சண்டையாக்கி, பரதத்தின் சங்கீதமேடையில் உட்காரவைத்தால் ஆடுகளம்.
வெற்றிமாறனுக்கு ஒரு சபாஷ்..


ஆடுகளத்தின் காதல் டிரேக் தான் படத்தின் மிகவும் இண்ட்ரஸ்டிங்கான டிரேக். ஆதாரகதையுடன் பின்னிபிணைந்தே வருகிறது. முதலில் பாத்திரப்படைப்புக்கள். சேவல் கலாச்சாரத்தில் திளைத்து வள்ரும் மண்ணின் மைந்தன் ஹீரோ. இதற்கு நேர் எதிர்பதம் ஹீரோயின் பிறந்த மண்ணோடு ஒட்டவும் முடியாமல வெட்டவும் முடியாமல் அந்நியப்பட்டு வாழும் ஆங்கிலோ-இந்திய பெண். முதல் சந்திப்பும் சேவல்சண்டையே காரணம். குருவின் பேச்சை கேட்காமல் எதிரியாகப் போவதற்கும் காதலே காரணம். இறுதியில் குருவின் சுயரூபம் தெரிவதற்கும் காதல் ஒரு பங்களிக்கிறது.

தோல்வியின் பக்கவிளைவுகளால் வீழ்ச்சியின் சுழலில் சிக்கும் குருவின் பாத்திரப்ப்டைப்பு மிக அழகாக உள்ளது. குறிப்பாக ஹீரோ குருவிடம் சொல்லும் கடைசி டைலாக் “நான் உன்னை என் அப்பா மாதிரி நினைத்திருந்தேனே.. ஹீரோ இவ்வாறு சொன்னதும் உடைந்துபோய் தற்கொலை செய்துக்கொள்வது படத்தின் மற்றும் ஒரு ஹை-லைட்.

வெறும் ஆயிரம் ரூபாய்க்காக தனது மானத்தை அடமானம் வைப்பது ஹீரோவிற்கு விவேகமா? இந்த குற்றம் குருவின் பலிவாங்குதலை நியாயப்படுத்திவிடுகிறதே?

ஆடுகளம் வெற்றிமாறனின் வெற்றிக்களம்

பி.கு : ஸ்டார் மூவீஸில் இன்று பார்த்த ஒரு குரு-சிஷ்யன் மோதல் ஆங்கில படம் 21
 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...