Thursday, January 20, 2011

தமிழ்திரையுலகின் தழுவல்கலாச்சாரம்


 எம்.ஜி.ஆர்-சிவாஜி காலம் முடிந்தபின் ரஜினி-கமல் காலம் 1980-களில் இருந்து இன்றுவரை நீடிக்கிறது. இவர்களின் சக்ஸஸ் பார்மூலாவைத்தான் விஜய்,அஜித் போன்றவர்கள் பாலோ செய்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.  ஒரு வலைதளத்தில் ரஜினி-கமல் பட கதைகளின் மூலம் பற்றி போட்டிருந்ததை பார்த்தேன். அந்த பட்டியல் இதோ..

Rajini Remakes

1.Moondru Mudichu- O Seetha Katha (Te)
2.Kuppathu Raja-Do Yaar (Hi)
3.Naan Vazavaipen-Majboor (Hi)
4.Billa-Don (Hi)
5.Natchathiram-Sivaranjani (Te)
6.Polladavan-Premade Kanike (Ka)
7.Thee-Deewar (Hi)
8.Thillu Mullu-Gol Maal (Hi)
9.Pokiri Raja-Chuttalunaru Jagratha (Te)
10.Pudhukavithai-Na Nina Mariyalare (Ka)
11.Adutha Varisu-Raja Rani (Hi)
12.Naan Mahan Alla-Viswanath (Hi)
13.Nallavanuku Nallavan-Dharmathmudu (Te)
14.Naan Sigapu Manithan-Aaj Ki Awaz (Hi)
15.Kai Kodukkum Kai-Katha Sangama (Ka)
16.Pathikathavan-Kuddhar (Hi)
17.Viduthalai-Qurbani (Hi)
18.Maaveeran-Mard (Hi)
19.Mr. Bharath-Trishul (Hi)
20.Naan Adimai Illai-Pyar Jhuktha Nahin (Hi)
21.Velaikaran-Namak Halal (Hi)
22.Guru Sishyan-Insaf Ki Pukar (Hi)
23.Dharmathin Thalivan-Kasme Vaade (Hi)
24.Siva-Khoon Pasina (Hi)
25.Maapillai-Athaki Yamudu Ammayiki Mogudu (Te)
26.Panakaran-Laawaris (Hi)
27.Adisaya Piravi-Yamudiki Mogudu (Te)
28.Dharmadhurai-Deva (Ka)
29.Mannan-Anuraga Aralidhu (Ka)
30.Annamalai-Kudh Karz (Hi)
31.Pandiyan-Bombay Dada (Ka)
32.Veera-Allari Mogudu (Te)
33.Baasha-Hum (Hi)
34.Muthu-Thenmavin Kombath (Ma)
35.Chandramukhi-Manichitrathazhu (Ma)
36.Arunachalam-Malamaal (Hi)
37.Thambikku Endha Ooru-A chiranjeevi film remake (Te)
38.Aarilirundhi Aruvadhu Varai-Remake of A Shobhan Babu Film (Te)
39.Kuselan-Katha Parayumbol (Ma)


Kamal Remakes

Avvai Shanmugi - Mrs Doubtfire
Panchathantiram - Very Bad Things
Nammavar - The Class of 1984
Virumandi - Life of David Gale
Pammal K Sambandam - The Bachelor
Vettri Vizha - Bourne Identity
Sathileelavathi - She Devil
Soora Samharam - Witness
Indian - Falling Down

இதில் என்ன பெரிய சங்கதி? இவ்விருவரின் படங்கள் 100% காப்பிகள் இல்லாவிட்டாலும் பெரும்பாலும் தழுவல்கள் தான். ஒன்றோ அல்லது இரண்டோ தழுவலாக இருந்தால் பரவாயில்லை. ஆனால், இன்று விஜய் முதல் ஜெயம் ரவி வரை எல்லோரும் பெரும்பாலும் இதுமாதிரி தழுவல் படங்களில் தான் நடிக்கிறார்கள்.

தமிழ் திரையுலகில் ஓரிஜினல் கதைகளுக்கு உரிய மரியாதை குறைகிறது. அதோடு தனித்துவம் வெளிபடுத்தும் இயக்குனர்கள் பெரும்பாலும் புதிய, அனுபவமில்லாத, நட்சத்திர அந்தஸ்து இல்லாத நடிகர்களுடனேயே படம் எடுக்கவேண்டிய கட்டாயம். இயக்குனர்களுக்கான் ஸ்கோப் மிகவும் குறுகலாக ஆகிவிட்டது. ஒரு படம் தோற்றாலே இயக்குனருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திரையலக தயாரிப்பார்கள், பிளாப் மேல் பிளாப் கொடுக்கும் நடிகர்களையும் தாங்குகிறார்கள், இதுதான் கொடுமை.


தழுவல் படங்களில் இயக்குனர்களின் பங்களிப்பு மிகமிக கம்மியே (கொஞ்சம் ஆங்காங்கு திறைமை காட்டலாம்தான்..). இம்மாதிரி வரும் தழுவல் படங்களில் நடிகர்களின் பெர்பாமன்ஸே பிரதானமாகிறது. நடிகர்கள் இப்படங்களை தங்கள் தோள்களில் சுமக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. நடிகர்கள் கொஞ்சம் வளர்ந்தபின் ஒரிஜினல் கதைகளையும்கூட தங்கள் இமேஜ்ஜிற்கு தகுந்தவாறு மாற்றச்சொல்கிறார்கள். இப்படியே போகப்போக இயக்குனர்கள் டம்மீபீஸ் ஆகிறார்கள்.

நட்சத்திர நடிகர்கள் படங்களுக்கு மட்டுமே வியாபாரம் என்று இருக்கும் சூழலில், சொந்தமாகவோ அல்லது காப்பியடித்தோ கதை, திரைக்கதை எழுதி நடிகர்களை இம்பிரஸ் செய்து இயக்குனர்களாகி விடலாம் என்று கனவு காணும் உதவி இயக்குனர்களின் கதி? இதில் காமெடி என்னவென்றால், பெரும்பாலான உதவிடைரக்டர்கள் சொந்த ஊர்களில் இருந்து வாழ்க்கையையே பணயம் வைத்து சினிமாவிற்கு வருவதற்கான இன்ஸ்பிரேஷன் இதே நடிகர்கள்தான்.

ஓகே. இதையும் தாண்டி ஒரிஜினல் கதைகளுடன் இயக்குனர்கள் மிகுந்த போராட்டத்திற்கு பிறகும் வந்துகொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், இவர்களின் பங்களிப்பில் வளரும் நடிகர்கள் நட்சத்திரங்களான உடன் இதே இயக்குனர்களுக்கு (நட்சத்திர நடிகர்கள் நடிக்காமல் எடுக்கப்ப்டும் படங்களுக்கு) போட்டியாளர்கள் ஆகிவிடுகிறார்கள். இதனால் தான் என்னவோ இப்போதெல்லாம் இயக்குனர்களே நடிகர்களாகிவிட்டனர்.

திரைப்படங்கள் தான் இன்றைய சந்தைசார்ந்த கலாச்சாரத்தில் மிகப்பிரதானமான படைப்புக்கள். ஒரு நாவல் படம் ஆனால், ஒரு எழுத்தாளர் இன்ஸ்டண்ட் பிரபலம் ஆகும் காலமிது. ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு தழுவல் படம் எடுக்கப்படும்பொழுதும் ஒரு எழுத்தாளனின் (அல்லது எழுதி-இயக்குபவரின்) வாய்ப்பு பறிபோகிறது என்று தானே அர்த்தம்.

தழுவல் படங்களே கூடாது என்று சொல்லவரவில்லை. தழுவல் படங்களை மட்டுமே செய்வதை தான் தவறு என்கிறேன். தழுவல் படங்களில் நடித்தே தன் நட்சத்திர அந்தஸ்த்தை தக்கவைத்து கொள்வது “Same Side Goal” போட்டே சாதனை செய்ததாக நினைத்துக்கொள்வதற்கு சமம்.

ஒரு படங்களின் வெற்றிதோல்வியை நிர்ணயம் செய்வதில் இணையத்தின் பங்கு வளர்ந்துவரும் இந்த சமயத்தில், வலைப்பதிவர்கள் காப்பியடித்து படம் எடுப்பவர்களை (இந்த படங்களிலாவது துளியேனும் கதையிருக்கும்) கண்டிப்பதைவிட தழுவல் படம் எடுப்பவர்களை கடுமையாக கண்டிக்கவேண்டும் என்பது என் வாதம்.




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...